இமயம் தாண்டியும் உதிக்கும்
சூரியன் போல
கரையை தாண்டி வரும்
கடல் அலை போல
மீண்டும் பிறந்த ஒரு காவியம்.
இலக்கணங்கள் மாறினாலும்
வரம்புகள் மீறினாலும்
உணர்வுகள் மதிக்கப்பட்ட
ஒரு அற்புதம்.
கடந்து செல்லும் காலத்திலும்
விரைந்து ஓடும் வாழ்க்கையிலும்
உணரப்பட்ட இரு உயிர்களின்
இனிமையான இதய பரிமாற்றம்.
காதல் என்று சொல்லும்
இந்த அற்புத பரிமாற்றத்திற்கு
எனது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment