Thursday, 10 September 2015

என் மழலையின் புன்னகை

கவிஞர்களுக்கு எட்டாத கற்பனை
இவள் புன்னகை 

சித்திரத்தில் தீட்டப்படாத ஓவியம்
இவள் புன்னகை 

கல்லில் செதுக்கபாடாத சிற்பம்
இவள் புன்னகை 

வார்த்தைகளில் பாடபடாத கவிதை.
இவள் புன்னகை 

வண்டுகளுக்கு தெரியாத வாசம்.
இவள் புன்னகை 

தேனீக்கள் அறியாத தேன்கூடு.
இவள் புன்னகை 

திகட்டாத தித்திக்கும் இன்பம்
இவள் புன்னகை 

வரையறை இல்லா இலக்கணம்
இவள் புன்னகை 

வறட்சி அறியா நீரோடை 
இவள் புன்னகை 

பேரலைகள் தரும் சிறு கடல்
இவள் புன்னகை 

மனதில் சுகமளிக்கும் வன்முறை
இவள் புன்னகை.


No comments:

Post a Comment