Tuesday, 25 May 2021

நினைக்க தெரிந்த மனமே!!!

எதையும் எளிதாய்
மறக்க தெரிந்த மனமே
பிரிவின் வலியில் வாடும்போது,
நினைக்க மட்டுமே தெரிந்த
இன்னொரு மனதின்
வலியை எவர் அறிவாரோ?

வேலி

காற்றுக்கு மட்டும் 
அல்ல,
சிலரது நினைவுகளுக்கும்
மனதினால்
வேலி போட முடியாது

Monday, 24 May 2021

உற்ற துணை

இடைவிடாத இன்னல்களுக்கு 
இடையிலும், உன்
இதயம் நினைத்து தவிக்கும்
இணையற்ற ஓர்
இதயம் தான் அதன் உற்ற துணை.

Sunday, 23 May 2021

கொரோனா

கொரோனா வலிகளிகளுக்கு மத்தியில்
சில நினைவலைகள் மட்டும்
கடலலைகளாய் வந்து
மோதிக்கொண்டே இருக்கின்றன.
உறங்கவிடாமல்.

Thursday, 20 May 2021

புரிதல்

நமக்கான 
ஓர் உயிரின் துன்பம்,
ஒருபோதும் 
எவ்விதத்திலும்
நமக்கு இன்பமளிப்பதில்லை.

Tuesday, 18 May 2021

கலங்காதிரு மனமே!!!

 சிறிது சிறிதாய் நீ

சிதைந்துகொண்டிருக்கும் வேளையில்,

நீ சிந்திக்க  தொடங்கிய நொடியே,

நிறுத்தப்படுகிறது  நீ சிதைவது.

காணும் துன்பங்கள் யாவும் 

கானலாய்  மறையும் பிம்பங்கள்.

நிம்மதி மட்டுமே 

இறுதிவரை தொடரும் நிஜங்கள்.

இதை அறிந்துகொண்ட 

உள்ளம் கலங்குவதில்லை. 

காலம் வரும் வரை 

காத்திருப்பதும் தவறில்லை.