Thursday, 23 September 2021

அமைதி


இன்ப, துன்பங்களில் 
நீங்கள் கொள்ளும் அமைதி,
உங்களை 
இன்னும் ஒருபடி மேலே
இட்டுச்செல்லும்.

Monday, 23 August 2021

அன்பும் சுமைதான்


புரிந்துகொள்ளாத இடத்திலும்,

உதாசினப்படுத்தும் இடத்திலும், 

நீ வைக்கும் அன்பும் 

சுமை தான்.

Saturday, 14 August 2021

சுதந்திரம்

சுதந்திரம்,
இன்றைய நிலையில்
ஒரு ரூபாய்
மிட்டாய்யிலும் ,
ஒரு நாள் விடுமுறையிலும் மட்டுமே
வாழ்கிறது நம் தாய் நாட்டின் சுதந்திரம்.

கிழிந்து கிடந்த இந்தியாவை
ஒற்றை நூல் கொண்டு
கோர்த்து சேர்த்திட வந்த
ஒரு வார்த்தை தான் சுதந்திரம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்,
தண்ணீர் விட்ட வளர்த்தோம்,
எங்கள் கண்ணீர் விட்டல்லவா காத்தோம்,
என்று மகாகவி பாடி பெட்ரா சுதந்திரம்.

இந்திய தேசிய படையின் ஊதியம்
மரணம்.
நம் சுதந்திர இந்தியாவின் அடித்தளம்
நம் மரணம் - என்று
நேதாஜி முழக்கமிட்டு பெற்று தந்த சுதந்திரம்.

ஏவலராய், கோழையராய்,
சிரம் பணிந்து அடிமையராய்,
செயலிழந்து சிலையாய், கேவலமாய் வாழ்ந்த நம்மை,
யாவரும் சமமாக்கி சீர்கொடுத்தது சுதந்திரம்.

ஆனால்,
இவையெல்லாம் இன்று மறந்தன, காற்றில் பறந்தன.
சுதந்திர கீதங்கள் நிலையிழந்து
தேசிய கீதங்கள் மதிப்பிழந்து உழன்றுகொண்டிருக்கிறது.

தேசிய கீதங்கள் திரையரங்குகளில்
ஒலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
அங்கு வந்தவன் தான் அதை மதித்தானா என்றால்? - இல்லை
பெரும் அவமானம்தான். அதில் படித்தவன் தான் அநேகம்.

இரவில் பெற்றதாலோ என்னவோ
இன்றுவரை கண்ணுக்கு புலப்படாமலே இருக்கிறது
போராடி பெற்ற  நம் சுதந்திரம்.
போற்றப்படாமலே போகிறது இன்றைய தலைமுறையில்.

நம் வரலாற்றின் பல நல்ல பக்கங்களை
நம்மால் இயன்ற வரை
கொண்டு சேர்ப்போம் இன்றைய தலைமுறைக்கு.
வாழ்க நம் சுதந்திரம், வளர்க நம் பாரதம்.


வாழ்க்கை நிஜத்தில் வாழ்வதற்கே

கனவுலகில் 
மட்டுமே நல்வாழ்வு வாழும்
சில உயிர்கள்,
கலைந்ததும் அக்கனவோடு
அவர்கள் வீழ்வதில்லை.

Wednesday, 11 August 2021

பிடித்த இதயம்

தினம் ஆயிரம் முறை  
அலைகள் வந்து மோதினாலும்
கரைகள் அழுவதில்லை.
மாற்றாக,
கடல் நீர் தன்னை விட்டு
சற்றே விலகி சென்றாலும்
கரைகள் அதை தாங்குவதில்லை.



கடல் 

Monday, 21 June 2021

மாசற்ற அன்பு

கண்ணுக்கு மறைந்து போனாலும்
நெஞ்சில் இல்லாமல் போகாது.

Thursday, 17 June 2021

திறந்த உள்ளம் (Open mind)

திறந்த உள்ளம் உடையவரே
எதையும் நிலையாய் கற்கவும்,
என்றும் நிலைத்து நிற்கவும்
செய்கிறார்கள்.

Tuesday, 15 June 2021

வாழ்வதற்கென்று வந்தவர்கள்

உழுதவன் உண்பதற்கில்லை.
நெய்தவன் உடுப்பதற்கில்லை.
காப்பவன் பார்ப்பதற்கில்லை.
இம்மண்ணில்
வாழ்வதற்கென்று வந்தவர்கள்
சொற்பமே.
அவரகளுள் நாமும் 
சேர்ந்திடுவோம்.
வாழும் வரையும்
வாழ்ந்த பின்பும்
வாழைபோல் இருப்போம்.
இன்னல்கள் மறந்திருப்போம்.


Monday, 7 June 2021

எல்லாம் உன்னோடு

என் நாட்கள் 
உன் நினைவுகளோடு.
என் வானம்
உன் வண்ணங்களோடு.
என் எண்ணம்
உன் சிந்தனைகளோடு.
என் உறக்கம்
உன் கனவுகளோடு.
என் செயல்
உன் சொல்லோடு.
என் இன்பம்
உன்ன பின்னோடு.


Tuesday, 25 May 2021

நினைக்க தெரிந்த மனமே!!!

எதையும் எளிதாய்
மறக்க தெரிந்த மனமே
பிரிவின் வலியில் வாடும்போது,
நினைக்க மட்டுமே தெரிந்த
இன்னொரு மனதின்
வலியை எவர் அறிவாரோ?

வேலி

காற்றுக்கு மட்டும் 
அல்ல,
சிலரது நினைவுகளுக்கும்
மனதினால்
வேலி போட முடியாது

Monday, 24 May 2021

உற்ற துணை

இடைவிடாத இன்னல்களுக்கு 
இடையிலும், உன்
இதயம் நினைத்து தவிக்கும்
இணையற்ற ஓர்
இதயம் தான் அதன் உற்ற துணை.

Sunday, 23 May 2021

கொரோனா

கொரோனா வலிகளிகளுக்கு மத்தியில்
சில நினைவலைகள் மட்டும்
கடலலைகளாய் வந்து
மோதிக்கொண்டே இருக்கின்றன.
உறங்கவிடாமல்.

Thursday, 20 May 2021

புரிதல்

நமக்கான 
ஓர் உயிரின் துன்பம்,
ஒருபோதும் 
எவ்விதத்திலும்
நமக்கு இன்பமளிப்பதில்லை.

Tuesday, 18 May 2021

கலங்காதிரு மனமே!!!

 சிறிது சிறிதாய் நீ

சிதைந்துகொண்டிருக்கும் வேளையில்,

நீ சிந்திக்க  தொடங்கிய நொடியே,

நிறுத்தப்படுகிறது  நீ சிதைவது.

காணும் துன்பங்கள் யாவும் 

கானலாய்  மறையும் பிம்பங்கள்.

நிம்மதி மட்டுமே 

இறுதிவரை தொடரும் நிஜங்கள்.

இதை அறிந்துகொண்ட 

உள்ளம் கலங்குவதில்லை. 

காலம் வரும் வரை 

காத்திருப்பதும் தவறில்லை.