பூத்து குலுங்கிய மலர்கள்,
மனம் வீசிய இதழ்கள்,
கனி கொடுத்த கிளைகள்,
அவைகளை ருசித்த கிளிகளென,
அழகிய வசந்தகால நந்தவனத்தை
ரசித்தவன் நான்,
அவைகளெல்லாம்
அவள் புன்னகையை பார்க்காத வரையில்,
என் கண்களோடு அவள் கண்கள் பேசாத வரையில்,
அவள் மூச்சு காற்று என் மேனியை தொடாத வரையில்,
அவள் வாசம் என்னை வசம் செய்யாத வரையில்,
இப்போது சற்று திரும்பி பார்த்தேன்
நான் ரசித்தவைகளை,
அதில் அவளை தவிர வேறு இல்லை.
அவள் பின்னோடு சென்ற என் ரசனைகளோடு
அவளையும் சேர்த்து
என் நெஞ்சோடு அணைத்து கொண்டேன்.