Friday, 2 May 2014

தாய்மை

உன் தாய் கடவுளின் பாதி,
உன்னுள் மீதி.
அவளுக்காக என்றுமே விழித்திரு,
உனக்காக என்றுமே பசித்திரு.
உன் கவலையில் தனித்திரு-ஆனால்
உன் தாயுடன் சேர்ந்திரு.
உனக்கென எழுதவில்லை எதுவும்-ஆனால்
உனக்காகவே உள்ளன அவ்வளவும்.
மனிதா! உனக்கானவை உனக்கு மட்டுமே-ஆனால்
அது நடக்கும் தாயின் துணை இருந்தால் மட்டுமே

Thursday, 1 May 2014

எனது நட்புக்காக

தந்தையிடம் கதை சொல்லி,
தாயிடம் பொய் சொல்லி,
குருவிடம் அடி வாங்கியபோதும்,
கடவுளுக்கு நன்றி சொல்லி,
சாதி, மதம், இனம் பாராது,
ஆண், பெண் வேறுபாடின்றி,
சாலையோரம் கை கோர்த்து,
கடற்கரையில் கால் நனைத்து,
முடிவென்ற சொல் அறியாத,
உயிரோடு கலந்த,
இன்பத்தின் இருப்பிடமான
ஒரு உறவு
நட்பு...