கிராமத்தானின் கிறுக்கல்கள்
Thursday, 26 January 2023
இறை
கேட்ட போது கொடுக்கவில்லை,
வேண்டிய போது கிடைக்கவில்லை,
அழைத்த நேரம் வரவில்லை,
பேசிய நேரம் கேட்கவில்லை,
தேவையான நேரம் உதவவில்லை,
வருந்திய போது ஆருதலாய் இல்லை,
சிரித்த போது காரணமாய் இல்லை,
வலித்த போது மருந்தாய் இல்லை,
மொத்தத்தில் இருந்தும் பயனில்லை...
Thursday, 19 January 2023
பிம்பம்
நீயென, நீ உணரும்
உன் நிழல்
உன்னை விட்டு விலகும் நேரம்
உன் சிந்தையும்
உன் மொழியும்
உன் செயலும் விலகும்.
உன் இன்பங்கள் இன்னல்களாகும்.
உன் உயிரும், மெய்யும்
உனக்கு பாரமாய் மாறும்.
உன்னால் உன்னை அறிய முடியாது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)