கிராமத்தானின் கிறுக்கல்கள்
Friday, 2 February 2024
ஏங்குகிறேன்
பட்டால் தானே தெரிகின்றது
பாசம் இன்னதென்று,
தொட்டால் தானே தெரிகின்றது
நெருப்பு சுடுமென்று.
நான்
பட்டும் விட்டேன்,
தொட்டும் விட்டேன்.
சுட்டது மறந்து
பட்டது தொடருமா...
ஏங்குகிறேன்...
மன்னிப்பு - மிகப்பெரிய ஆயுதம்
பொறுமையிலும் உயர்ந்த
தவமில்லை,
திருப்தியிலும் உயர்ந்த
இன்பமில்லை,
கருணைய்யை மிஞ்சிய
அறமில்லலை,
மன்னித்தலை விட பெரிய ஆயுதம்
உலகில் எதுவுமில்லை.
- கண்ணதாசன்
Thursday, 1 February 2024
🌹
மண்ணிலே
பிறந்த மலர் - நான்
உன் கூந்தலில்
நீ எனை சூடினால் தான்
மோட்சம்
மன்னிப்பு
தெளிவற்ற ஒரு நெஞ்சம்
தேடுகின்றது பிராயச்சித்தம்...
என் அப்பன் சிவனே
அன்னை சக்தியே
அருளுங்கள்...
மலர்
மண்ணிலே
பிறந்த மலர் - நான்
உன் கூந்தலில்
நீ எனை சூடினால் தான்
மோட்சம்
நேற்றுவரை நான்
காற்றாய் உலா வந்த என்னை
குழலாய் வந்து, அவள்
தன்னோடு எனை கலந்து
நல்லோர் ரசிக்கும் கீதமாய் மாற்றியிருந்தால் - நேற்று வரை.
இன்று
மீண்டும் புழுதியாய் நான்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)