கிராமத்தானின் கிறுக்கல்கள்
Tuesday, 16 June 2026
Pain of word BYE
Its Easy
To Say BYE
But,
It Will Be
Very Difficult
To LiVe
With Out ....?
உயிரின் வலி
ஓர் நாள் நீ நேசிக்கும்
ஓர் உயிர்,
உனை வெறுக்கும் போது
உன் உயிரின் வலியை,
உன் உயிர் மட்டுமே
உணரும்.
Friday, 3 October 2025
வலியின் மற்றுமொரு பரிமாணம்
சிறு நொடியும்
சிந்தையை விட்டு விலகவில்லை.
சிறு துகள்களாய்
சிதைகிறது மனம்.
கண்களின் கண்ணீர் கொண்டு
இதயத்தில் வழியும்
குருதியை கழுவிட
முயல்கிறது கரம், பயனில்லை.
இரண்டுமே நின்றபாடில்லை.
பிரிவின் வலியின்
மற்றுமொரு பரிமாணம் இது.
Friday, 16 August 2024
உண்மை அழுகிறது
பொய்யை
காணும் கண்களுக்கு
உரக்க கத்தும்
உண்மை புரியவில்லை.
Sunday, 11 August 2024
ஏங்குகிறேன்
அன்னை மடியில்
தலை சாய்ந்து கிடந்த
நினைவு நெஞ்சிலில்லை.
உந்தன் மடியல்
தலை சாய்ந்து
எல்லாம் மறந்து
துயிலுற்றிருந்த நினைவு
நெஞ்சை விட்டு விலகவில்லை.
Thursday, 8 August 2024
நீ, நான், நாம்
உன்னை, நான்
நினைக்காமல் இருக்க,
என்னை, நான்
நினையாமல் இருக்க வேண்டும்.
உன்னை, நான்
தேடாமல் இருக்க,
என்னை, நான்
தேடாமல் இருக்க வேண்டும்.
உன்னை, நான்
மறந்திருக்க,
என்னை, நான்
மறந்திருக்க வேண்டும்.
நான்,
நீ இல்லாமல்
முழுமை பெறுவதில்லை.
Tuesday, 23 July 2024
எவர் அறிவாரோ
கண்கள் தேடும்
ஒரு காட்சி
தன்னை அலட்சியம்
செய்யும் வேளையில்
கண்கள் இருந்தும்
பயன் என்ன?
உள்ளம் நாடும்
ஒரு துணை
உன்னை ஒதுக்கிடும்
அந்த நிலையில்
உன்னுயிர் இருந்தும்
பயன் என்ன.
நீ நேசிக்கும்
ஒரு உள்ளம்
தன்னை நீ
ஏமாற்றுவதாய் பொருளுணர்ந்தால்
உண்மையில் நேசித்த
உன்னுள்ளத்தின் வலியை
எவர் அறிவாரோ.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)