Friday, 16 August 2024

உண்மை அழுகிறது

பொய்யை 
காணும் கண்களுக்கு
உரக்க கத்தும் 
உண்மை புரியவில்லை.

Sunday, 11 August 2024

ஏங்குகிறேன்

அன்னை மடியில்
தலை சாய்ந்து கிடந்த
நினைவு நெஞ்சிலில்லை.
உந்தன் மடியல்
தலை சாய்ந்து 
எல்லாம் மறந்து 
துயிலுற்றிருந்த நினைவு
நெஞ்சை விட்டு விலகவில்லை.

Thursday, 8 August 2024

நீ, நான், நாம்

உன்னை, நான் 
நினைக்காமல் இருக்க,
என்னை, நான்
நினையாமல் இருக்க வேண்டும்.

உன்னை, நான் 
தேடாமல் இருக்க,
என்னை, நான்
தேடாமல் இருக்க வேண்டும்.

உன்னை, நான் 
மறந்திருக்க,
என்னை, நான்
மறந்திருக்க வேண்டும்.

நான்,
நீ இல்லாமல்
முழுமை பெறுவதில்லை.




Tuesday, 23 July 2024

எவர் அறிவாரோ

கண்கள் தேடும்
ஒரு காட்சி
தன்னை அலட்சியம்
செய்யும் வேளையில்
கண்கள் இருந்தும் 
பயன் என்ன?

உள்ளம் நாடும்
ஒரு துணை
உன்னை ஒதுக்கிடும்
அந்த நிலையில்
உன்னுயிர் இருந்தும்
பயன் என்ன.

நீ நேசிக்கும்
ஒரு உள்ளம்
தன்னை நீ
ஏமாற்றுவதாய் பொருளுணர்ந்தால்
உண்மையில் நேசித்த
உன்னுள்ளத்தின் வலியை
எவர் அறிவாரோ.

Monday, 1 April 2024

பாரம்

நான் சுவாசிக்கும் 
மூச்சுக்காற்றும் - இன்று
எனக்கு பாரமாய்
இருக்கிறது.

சக்தியின்றி வாழ்கிறேன்

தாள் தொழுது உரைக்கிறேன்
உலகம் உள்ளளவும்,
என் மெய் 
பூமித்தாயின் அடியில்
சென்று சேரும் மட்டும்
உனை மறவேன்,
உனை பிரியேன்.

ஊண் அளவு குறைந்து,
மெய் மெலிந்து,
நடு கானகத்தில்
நான் ஒருவனாய்
வாழ்கிறேன்
வாழ சக்தியின்றி



Friday, 2 February 2024

ஏங்குகிறேன்

பட்டால் தானே தெரிகின்றது
பாசம் இன்னதென்று,
தொட்டால் தானே தெரிகின்றது
நெருப்பு சுடுமென்று.
நான் 
பட்டும் விட்டேன்,
தொட்டும் விட்டேன்.
சுட்டது மறந்து
பட்டது தொடருமா...
ஏங்குகிறேன்...

மன்னிப்பு - மிகப்பெரிய ஆயுதம்

பொறுமையிலும் உயர்ந்த
தவமில்லை,
திருப்தியிலும் உயர்ந்த
இன்பமில்லை,
கருணைய்யை மிஞ்சிய
அறமில்லலை,
மன்னித்தலை விட பெரிய ஆயுதம்
உலகில் எதுவுமில்லை.
                        - கண்ணதாசன்

Thursday, 1 February 2024

🌹

மண்ணிலே 
பிறந்த மலர் - நான் 
உன் கூந்தலில் 
நீ எனை சூடினால் தான்
மோட்சம் 



மன்னிப்பு

தெளிவற்ற ஒரு நெஞ்சம்
தேடுகின்றது பிராயச்சித்தம்...
என் அப்பன் சிவனே
அன்னை சக்தியே
அருளுங்கள்...

மலர்

மண்ணிலே 
பிறந்த மலர் - நான் 
உன் கூந்தலில் 
நீ எனை சூடினால் தான்
மோட்சம் 



நேற்றுவரை நான்

காற்றாய் உலா வந்த என்னை
குழலாய் வந்து, அவள்
தன்னோடு எனை கலந்து
நல்லோர் ரசிக்கும் கீதமாய் மாற்றியிருந்தால் - நேற்று வரை.
இன்று 
மீண்டும் புழுதியாய் நான்.

Tuesday, 23 January 2024

தகுதியிழதந்தேன்

எட்டா நிலவு 
என்னை எட்டி வந்த போது,
ஆசையாய் அள்ளி 
அணைத்து கொள்ள அருகில் 
சென்ற எனை,
எட்டா தூரத்திற்கு 
எட்டி தள்ளியது,
எனக்கு எந்த
தகுதியும் இல்லையென்று.

Monday, 22 January 2024

யாவும் நான்

சல்லடையில் 
சலித்து எடுக்கப்பட்ட
செல்லாக் காசு.
வாழ்வை
மேடையாக்கி நடித்த
நல்ல நடிகன்.
எதையும்
உணராத நல்லலோர்
மரக்கட்யை.
வேண்டியதை
நிகழ்த்திகொள்ளும் 
காரியக்காரன்.
தான் என
எண்ணி நான் வாழும்
சுயநலவாதி.