Monday, 12 August 2013

காலை வணக்கம் ...

முழுமதி :
காலை
கதிரவனின்
முகம் பார்த்ததும் - அவன்
மனம் ஏங்கித்தவித்தது,
தன் முகம் மறைக்கப்படுவதால்.

வாழிடம் :
மண்ணில்
ஆண்டுகள் பல வாழ
ஆசை இல்லை எனக்கு.
மாறாக அவள் மனதில்.

Sunday, 11 August 2013

கண்ணீர்த்துளிகள்

பயிர்கள் விளைவிக்கும்
யுக்தியை
கண்ணீர் துளிகள் கற்றிருந்தால்
தன் கண்ணீரிலும்
மகிழ்வுடன் இருந்திருப்பான்
என் நாட்டு உழவன்...
இது
இந்த கிராமத்தானின் கிறுக்கலில்
முதலாவது...

இங்கு 
உண்மையான உணர்வுகள்
விலைபோவதில்லை,
ஆனாலும் வருத்தமில்லை.
அவைகள் விற்பனைக்கல்ல.
                           -