மன்னன் என்பவனும் மகேசன் தான்.
மக்கள் என்பவரும் மன்னர்கள் தான்.
மன்னர் ஆட்சியில்.
அரசு என்பது ஆண்டவன் தான்,
மக்கள் என்பவர்கள் அடிமைகள் தான்.
மக்கள் ஆட்சியில்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் அரசாட்சி,
அறுபது ஆண்டுகள் அரசியலாட்சி,
இதில் எங்கே நடந்தது மக்கள் ஆட்சி!!!
அடிமையாய் இருந்தோம் ஆங்கிலேயனிடம்
இன்றும் இருக்கிறோம் அரசியல் தெரிந்தவர்களிடம்.
போதும் போதும் இந்த மக்கள் ஆட்சி.
எண்ணி எண்ணி தொழுதாலும்
இங்கே நல்லவர் என்றும், தீயவர் என்றும் பேதம் இல்லை.
கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய்,
வாயிருந்தும் ஊமையாய் இருந்தோம், ஒவ்வொரு
ஐந்து ஆண்டுகளும்.
நீண்ட வரிசையில் காத்திருந்தோம்,
ஒற்றை விரலால், நம்மை நாமே அடிமை ஆக்கினோம்.
படித்தவர்கள் பலகோடி இருந்தும்
படித்தவன் எவனும் பதவியில் இல்லை.
IAS, IPS ஆனால்
மட்டும் என்ன - இவர்கள்
அரசியல்வாதிகள் தூக்கி எறியும் காகிதங்கள் தானே.
படித்தும் கூட பயனில்லை,
சட்டம் கூட துணையில்லை.
நேர்மையான தேர்தல் உண்டு,
நேர்மையான அரசியல்வாதி உண்டா?
இனியேனும்,
சிந்தனை என்பதை வளர செய்வோம்
மக்கள் ஆட்சி என்பதை மலர செய்வோம்.