Thursday, 10 September 2015

சிந்தனையும் செயலும்

துணிந்தவன் துவளுவதில்லை
துவண்டவன் துணிவதில்லை.

துவண்டவன் துணிந்தால்
முயற்சி என்பது விதையாகும்.

துணிந்தவன் முயன்றால்
வெற்றி என்பது மாலையாகும்.

இன்பங்களும் இன்னல்களும்
இரு கண்களை போல,

இருப்பவை இரண்டானாலும்
காட்சி என்பது ஒன்றுதான்.

கலைஞனின் கண்களுக்கு
கல்லும் சிற்பம் தான்.

கவிஞனின் கற்பனைக்கு
புதர்கள் கூட பூந்தோட்டங்கள் தான்.

அழகான சிந்தனை
உன்னை சிறந்தவனாகும்.

ஆபத்தான சிந்தனை
உன்னை சீரழிக்கும்.

சிந்தித்திப்பவன் அமரனாவான்
நிந்திப்பவன் அரக்கனாவான்.

நீ அமரனாவதும்

அரக்கனாவதும் உன் சிந்தனையில்.

No comments:

Post a Comment