நான் சுவாசிக்கும்
மூச்சுக்காற்றும் - இன்று
எனக்கு பாரமாய்
இருக்கிறது.
தாள் தொழுது உரைக்கிறேன்
உலகம் உள்ளளவும்,
என் மெய்
பூமித்தாயின் அடியில்
சென்று சேரும் மட்டும்
உனை மறவேன்,
உனை பிரியேன்.
ஊண் அளவு குறைந்து,
மெய் மெலிந்து,
நடு கானகத்தில்
நான் ஒருவனாய்
வாழ்கிறேன்
வாழ சக்தியின்றி