என் மீது அவள் கொண்ட நேசம் தான் என்ன!
எட்டி நிற்கும் என்னை
தொட்டு அழைக்கிறாள்!
தினம் தினம் என்னை தழுவும்
அவளது கரங்கள்
அவளின்றி நான் இல்லை என்பதை
சொல்லாமல் எனக்கு சொல்லும்.
நான், என்னை உணர்ந்தது குறைவு,
அவள் என்னை உணர்ந்ததை விட,
எந்நேரமும் எனக்குள் இருப்பவள்
அவளல்லவா!
எனது இதயம் அவளது ஆலயம்,
நான் வாழ, அவளல்லவா சுவாசிக்கிறாள்,
அவள் வருவதும், வாழ்வதும்
எனக்காக அல்லவா!
நான் எட்டி நின்றாலும்
என்னை விடுவதில்லை,
நான் கொண்ட காதல் பிற உயிர்களின் மீது,
அவள் கொண்ட காதல் என் உயிரின் மீது,
கனவில் கலந்து, நினைவில் நிறைந்தவள்,
காவலாய் நின்று காத்திருப்பாள்,
எந்நேரமும் என்னுடன்.
அவளை நிழலென்றால் நிஜமில்லாமல் போகும்,
காற்று என்றால் ஒருமித்து போகும்
என் சுவாசத்தோடு,
என் சுவசக்கற்றாய்..
எட்டி நிற்கும் என்னை
தொட்டு அழைக்கிறாள்!
தினம் தினம் என்னை தழுவும்
அவளது கரங்கள்
அவளின்றி நான் இல்லை என்பதை
சொல்லாமல் எனக்கு சொல்லும்.
நான், என்னை உணர்ந்தது குறைவு,
அவள் என்னை உணர்ந்ததை விட,
எந்நேரமும் எனக்குள் இருப்பவள்
அவளல்லவா!
எனது இதயம் அவளது ஆலயம்,
நான் வாழ, அவளல்லவா சுவாசிக்கிறாள்,
அவள் வருவதும், வாழ்வதும்
எனக்காக அல்லவா!
நான் எட்டி நின்றாலும்
என்னை விடுவதில்லை,
நான் கொண்ட காதல் பிற உயிர்களின் மீது,
அவள் கொண்ட காதல் என் உயிரின் மீது,
கனவில் கலந்து, நினைவில் நிறைந்தவள்,
காவலாய் நின்று காத்திருப்பாள்,
எந்நேரமும் என்னுடன்.
அவளை நிழலென்றால் நிஜமில்லாமல் போகும்,
காற்று என்றால் ஒருமித்து போகும்
என் சுவாசத்தோடு,
என் சுவசக்கற்றாய்..
No comments:
Post a Comment