Tuesday, 29 July 2014

அன்னை மடி...

நேற்றுவரை
நான் உறங்கிய மடி
அதோ
நின்று பார்க்கிறது...
இன்று
நான் நான் வேறொரு மடியில்
உறங்குவதை.

எனக்கென
அவள் கொடுத்த
இன்னொரு தாயின் மடியில்.

என்னை
தூர நின்று பார்க்கிறாள்,
தாம்
தொலைத்துவிட்டோமோ என்று.

தொலைந்து போக
நான் நினைவுகள்  அல்ல...
அவளின் நிழல் .
என் சுவாசம் அவள் என்பது
புரியாத உயிராய்,
புதிராய் நிற்கிறாள் என் அன்னை.

1 comment:

  1. Superb.. heart touching,����������

    ReplyDelete