Monday, 14 March 2016

விலகிநின்று பார்

எப்போதும் மற்றோரை காண்பவரே
உன்னை நீ கண்டாயோ?
சற்று விலகிநின்று பார்.

பிறர் பாதை அடைப்பதனால்
உன் பாதை திறந்திடுமா?
சற்று பொறுத்திருந்து பார்.

உள்ளங்கையில் நீர் இருந்தால்,
உள்ளமது குளிர்ந்திடுமா?
சற்று அருந்தி பார்.

மனதிற்குள் ஒலி எழுந்தால்
உலகிற்கது கேட்டிடுமா?
சற்று உரக்க சொல்லிப்பார்.

முயன்றது முடியாவிடில்
முயற்சி நின்றிடுமா?
சற்று முயன்று பார்.

கல்லால் செய்ததனால்
கடவுள் மனம் கல்லாகிடுமா?
சற்று உணர்ந்து பார்.

உளமார வாழ்வதனால்
வாழ்வானது வளம்பெருமா?
சற்று காலம் வாழ்ந்துபார்.

வாழ்க்கை என்பது களிப்பாகும்,
வெற்றி என்பது உனதாகும்.
சற்று இவைகளை முயன்றுபார்.

No comments:

Post a Comment