அழகிற்கு ஆயிரம் உவமைகள் கூறலாம் ,
அனைத்திற்கும் ஒரே உவமையாய் உன்னை கூறலாம்.
நீ கருத்தாலும் உன்னை ரசிப்பவர் இங்குண்டு,
நீ வெளுத்தாலும் உன்னை ரசிப்பவர் இங்குண்டு.
உன்னை தூற்றுபவர் தூற்றும் நேரம்
உன்னை போற்றுபவரும் இங்குண்டு.
எங்களை மகிழ்விப்பவளும் நீதான்,
எங்களை மயங்கிட செய்பவளும் நீதான்.
நீ அழுதாலும்,
எங்கள் வாழ்வை செழித்திட செய்பவளும் நீதான்.
நீ சிரித்தாலும்,
எங்கள் வயிறை வாடிட செய்பவளும் நீதான்.
எங்களின் ஏற்றமும், தாழ்வும் நீதான்.
எங்களின் இரவும், பகலும் நீதான்.
சிவந்த திலகம் அணிந்த
தீர்க்க சுமங்கலி நீதான்.
வண்ணங்கள் ஆயிரம் கொண்டவளும் நீதான்,
ஒலி (இடி),
ஒளியை (மின்னல்) தாங்கியவளும் நீதான்.
அதிசயத்தின் பிறப்பிடம் நீதான்,
பூமித்தாயின் காதலனும் நீதான்.
வளர்ந்த பயிருக்கும்,
வாடிய பயிருக்கும் தந்தையும் நீதான்.
கோள்களின் உறைவிடமும் நீதான்,
கோளத்தின் கூரையும் நீதான்.
பஞ்சபூதங்களில் உயர்ந்தவனும் நீதான்,
குடையாய் நின்று எங்களை காப்பவனும்
நீதான்!!
No comments:
Post a Comment