ஓர்நாள் வாழும் மலரும்,
அதுநாள்கூட இராத பனியும்,
கொண்ட உறவின் அழகுதான்
இயற்கையின் கவிதை.
அதுநாள்கூட இராத பனியும்,
கொண்ட உறவின் அழகுதான்
இயற்கையின் கவிதை.
மலர்களின் மீது
தான் கொண்ட
காதலினால்,
தினம்தினம் வந்து
முத்தமிட்டு மடிகிறது
பனித்துளி.
காத்திருக்கும் நிலமகளை
அன்போடு
தினம்வந்து அரவணைக்கும்
பனித்துளியை,
தன்
செங்கதிர் நீட்டி
பிரித்திடுகிறான் பகலவன்.
No comments:
Post a Comment