Saturday, 23 July 2016

தொலைந்து போயின

செத்தை சருகுகளை இரையாக்கி,
பசியாற்றும் தீயின்
மெல்லிய ஒளியில்,

மலர்கள் மலரும் 
ஒலி கேட்கும் - அந்த 
முன் காலை இருளில் 

மௌனமாய் அமர்ந்து 
இருளோடு சேர்த்து - நம் 
மனக்கவலையையும் அகற்றிய பொழுதுகள்,

நம் கிராமத்தோடு 
மறைந்து போயின.

No comments:

Post a Comment