Friday, 3 October 2025

வலியின் மற்றுமொரு பரிமாணம்

சிறு நொடியும்
சிந்தையை விட்டு விலகவில்லை.
சிறு துகள்களாய்
சிதைகிறது மனம்.
கண்களின் கண்ணீர் கொண்டு
இதயத்தில் வழியும் 
குருதியை கழுவிட
முயல்கிறது கரம், பயனில்லை.
இரண்டுமே நின்றபாடில்லை.
பிரிவின் வலியின் 
மற்றுமொரு பரிமாணம் இது.

No comments:

Post a Comment