Wednesday, 13 April 2016

தோல்வியுற்றவன்

மறந்து போயும் இறவேன்,
இறந்தாலும் உனை மறவேன்.

என் காதல் மனர்சுவடுகள் அல்ல,
பாறையில் பதிந்த படிவங்கள்.

நீண்டு வளரும் தாடிக்குள் மறைக்கலாம்,
மதியை மயக்கும் மதுவுக்குள் மூழ்கலாம்.

இருந்தும் மறுக்கிறேன்.
உனது சுவடுகளை அழிக்க.

நிலவும் வானும் தான் நீயும், நானும்.
சிறு பொழுதும் பிரிவை உணர்ந்ததில்லை.

இனி ஒரு பொழுதும் சேர வழி இல்லை.
என் வானிற்கு மட்டும் என்றுமே அமாவாசை தான்.

எவரிடமும் கேட்க மனமில்லை,
இருந்தும் அறிகிறேன் உனைபற்றி அனைத்தும்.

சிந்தித்துப்பார்த்தேன்,
கடவுள் கொடுத்த வரம் இது.

தனிமை என்னும் உலகின்
துணையில்லா  அரசன் நான்.

பிறர் சென்ற சுவடுகள் ஆயிரம் இருந்தும்,
என் பாத சுவடுகள் தனியாய் தான் பதிகின்றன.


என்றென்றும் உன் நினைவுகளுடன்தோல்வியுற்றவன்

No comments:

Post a Comment